ஆண்டிபட்டியில் ஜெயாவை எதிர்த்து சந்திரலேகா போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆண்டிபட்டி இடைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்சந்திரலேகாவை நிறுத்தப் போவதாக அக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
நேற்று அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த தேர்தலில் சந்திரலேகாவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றுசொன்னேன். ஆனால் அதை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
ஆனால், இப்போதாவது ஜெயலலிதாவுக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக கருணாநிதிஅனைத்துக் கட்சியினரிடமும் பேசி முடிவு செய்ய வேண்டும்.
இப்போதும் ஜெயலலிதாவுக்கு எதிராக சந்திரலேகாவை நிறுத்த ஜனதா கட்சி தயாராக உள்ளது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications