கடலூர் அருகே 10 தமிழர் விடுதலை படையினர் கைது
கடலூர்:
கடலூர் அருகே காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 10 பேர் போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
கடலூர் புது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், சிதம்பரம்-கடலூர்நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாள்,உருட்டுக்கட்டைகள், கத்திகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து காரில் வந்த பத்து பேரையும் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் அவைரும் தமிழர் விடுதலைப்படையை சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்டவர்களில் தமிழ் விடுதலைப்படையின் மாநில பொது செயலாளர் அறிவழகன் (30), கடலூர்தெற்கு மாவட்ட செயலாளர் அல்லிராஜா (34) ஆகியோரும் அடங்குவர்.
போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications