விபத்தில் இறந்த நடிகர் பாரி குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு
சென்னை:
சாலை விபத்தில் மரணமடைந்த நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு "லோக் அதாலத்" நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைகொள்ளை கொண்டவர் பாரி வெங்கட். இந்த படத்திற்கு பின் அவருக்கு பல படங்கள் ஒப்பந்தமாகின.
இவர் 1999ம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில்மரணமடைந்தார். அடையாளம் தெரியாததால் அவரது பிணத்தை போலீசாரே புதைத்து விட்டனர்.
பின்னர் உண்மை தெரிந்த அவரது குடும்பத்தினர் பிணத்தை மீட்டு, முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தினர்.
இதையடுத்து, பாரிவெங்கட் குடும்பத்தினர் சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில்வழக்கு தொடர்ந்தனர். வெகு நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த 7ம் தேதி "லோக் அதாலத்"எனப்படும் மக்கள் கோர்ட் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த "லோக் அதாலத்", மறைந்த பாரிவெங்கட் குடும்பத்திற்கு இந்த விபத்திற்குக் காரணமாகஇருந்த வாகனத்தைப் பதிவு செய்துள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications