விபத்தில் இறந்த நடிகர் பாரி குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாலை விபத்தில் மரணமடைந்த நகைச்சுவை நடிகர் பாரி வெங்கட் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு "லோக் அதாலத்" நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைகொள்ளை கொண்டவர் பாரி வெங்கட். இந்த படத்திற்கு பின் அவருக்கு பல படங்கள் ஒப்பந்தமாகின.

இவர் 1999ம் ஆண்டு பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்தில்மரணமடைந்தார். அடையாளம் தெரியாததால் அவரது பிணத்தை போலீசாரே புதைத்து விட்டனர்.

பின்னர் உண்மை தெரிந்த அவரது குடும்பத்தினர் பிணத்தை மீட்டு, முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தினர்.

இதையடுத்து, பாரிவெங்கட் குடும்பத்தினர் சென்னை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில்வழக்கு தொடர்ந்தனர். வெகு நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த 7ம் தேதி "லோக் அதாலத்"எனப்படும் மக்கள் கோர்ட் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த "லோக் அதாலத்", மறைந்த பாரிவெங்கட் குடும்பத்திற்கு இந்த விபத்திற்குக் காரணமாகஇருந்த வாகனத்தைப் பதிவு செய்துள்ள இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.6 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+