நாடாளுமன்றத்தில் 2வது நாளாக அமளி
டெல்லி:
கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்காக சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும்(புதன்கிழமை) அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கியதில் கூட முறைகேடு நடந்துள்ளது என்று நாட்டின் தலைமை கணக்கு அதிகாரியான கம்ப்ரோலர்அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா (சி.ஏ.ஜி.) தெரிவித்துள்ளார்.
இவரது அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் ஈடுபட்டு அவைகளை ஒத்தி வைக்கச் செய்தன.
இந்நிலையில் இன்றும் மக்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால்நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளி செய்தனர். பெர்னாண்டஸ் உடனடியாக ராஜினாமாசெய்யவேண்டும் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.
பெர்னாண்டசை நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இதற்கிடையே பெர்னாண்டசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.
"இந்தியாவிலேயே எளிதாக சவப் பெட்டிகள் தயாரிக்க முடியும் என்னும் நிலையில் அமெரிக்காவிலிருந்துஅவற்றை இறக்குமதி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பதற்கு பெர்னாண்டஸ் கொஞ்சம் கூடத் தகுதியற்றவர். இதனால் அவரைஉடனடியாக நீக்க வேண்டும்" என்று அக்கட்சியின் பொலிட்-பீரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications