For Daily Alerts
Just In
பொடோ சட்டத்தை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பொடோ சட்டத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
தீவிரவாதத்தை தடுக்கும் வகையில் பொடோ சட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு அமல்படுத்தமுடிவெடுத்துள்ளது. இதனை பல கட்சிகளும் எதிர்த்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் பாண்டிச்சேரி பிரிவு செயலாளர் தலயாரி,இந்த பொடோ சட்டம் தலீத்துகளுக்கு எதிரானது என்றும், அதனை ரத்து செய்யுமாறும் கோரியுள்ளார்.
மேலும் இதுகுறித்த ஒரு கடிதத்தை வாஜ்பாய்க்கு கடிதம் எழுதி, அதை துணைநிலை ஆளுநர் டாக்டர் ரஜனி ராயிடம்கொடுத்துள்ளார் தலயாரி.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]