சென்னையில் தீ: 300 குடிசைகள் சாம்பல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பட்டினப்பாக்கம் அருகே இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 300 குடிசைகள்எரிந்து சாம்பலாயின.
சென்னை சாந்தோமுக்கு அருகில் உளளது பட்டினப்பாக்கம். இங்குள்ள திடீர் நகரில் இன்று காலை திடீரென்றுதீவிபத்து ஏற்பட்டது.
அடுத்தடுத்து எல்லாம் குடிசை வீடுகளாக இருந்ததால், வெகு வேகமாக தீ பரவியது. இதனால் அங்கிருந்த 300குடிசைகள் இத்தீவிபத்தில் எரிந்து சாம்பலாயின.
குடிசை மக்களின் துணிகள், உடமைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்பு படையினர் விரைந்து சென்றுதீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.
மின் கசிவினால் இந்தத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறிய போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications