"ஜெ.வை எதிர்ப்பவரை கருணாநிதி முடிவு செய்வார்": பாஜக
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுபவரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்கருணாநிதிதான் அறிவிக்க வேண்டும் என்று பாஜக பொது செயலாளர் இல. கணேசன் கூறினார்.
தமிழக பாஜக பொது செயலாளர் இல. கணேசன் இன்று (புதன்கிழமை) கோயம்புத்தூரில் பேட்டியளிக்கையில்கூறியதாவது:
தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் கருணாநிதி. எனவே அவர்தான் ஜெயலலிதாவை எதிர்த்துபோட்டியிடப்போகும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர் எந்தக்கட்சியின் வேட்பாளரை அறிவிக்கிறாரோ அவரை பாஜக ஆதரிக்கும்.
கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட விரும்பினாலும்,ஏதாவது ஒரு கட்சியின் வேட்பாளர் தான்கூட்டணியின் சார்பில் போட்டியிடுவர்.
மேலும், மேலும் திமுகவுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்த பிளவும் இல்லை. அவர்கள் தங்களுடையதனிப்பட்ட கருத்தை வெவ்வேறு விசயங்களில் கூறியிருப்பதால் அவ்வாறு தோன்றலாம். பந்தில் அவர்கள் தனித்துஈடுபட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் பாஜகவுக்கும், திமுகவுக்கும் ஆரோக்கியமான உறவே இருந்து வருகிறது.
ஜெயலலிதா பொடோ சட்டத்திற்கு ஆதரவளித்து மாநில, மத்திய அரசுகளுக்குள் உள்ள உறவே தவிர, வேறு எந்தகாரணமும் இல்லை என்றார் கணேசன்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழக அரசும் தாக்குதலுக்கு காரணமானஉண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தீவிரவாதத்துக்கு எதிரான பொடோ சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் பாஜகவுக்கு பேரும், புகழும்கிடைக்கும். இதனால்தான் காங்கிரஸ் கட்சியினர் பொடோவை தாக்கல் செய்ய விடாமல் நாடாளுமன்றத்தில்குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் கணேசன் கூறினார்.












Click it and Unblock the Notifications