3 சென்னை மாணவிகள் குமரியில் மீட்பு
சென்னை:
சென்னையிலிருந்து காணாமல் போன 9 மாணவிகளுள் 3 பேர் கன்னியாகுமரியில் மீட்கப்பட்டனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த கோமளவல்லி (15), அர்ச்சனா (13), ரஞ்சனா (14) ஆகியோரைதிங்கள்கிழமை முதல் -காணவில்லை என அவர்களது பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்திருந்தனர்.
இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு மூன்று மாணவிகளையும் போலீசார் தேடி வந்தனர். இதேபோல, மேலும்6 மாணவிகளும் சென்னையிலிருந்து காணவில்லை என போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்துசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மந்தைவெளி மாணவிகள் -மூன்று பேரும் கன்னியாகும-ரியில் இருப்பதாக சென்னைபோலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து சென்னை போலீசாார் கன்னியாகுமரி விரைந்தனர். அங்குஹோட்டலில் தங்கியிருந்த மூன்று மாணவிகளையும் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
ஏன் சென்னையிலிருந்து ஓடி வந்தீர்கள் என்று மாணவிகளைக் கேட்டபோது, பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிரும்பாமல்தான் ஓடி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட 3 மாணவிகளும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications