விடுதலைப் புலிகள் தாக்கி 9 பாதுகாப்பு படையினர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில் 6 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.

கிழக்கு இலங்கையில் முத்தூர் அருகே பாலதோப்பூரில் உள்ள ராணுவ முகாமுக்குள் நேற்றிரவு பயங்கரஆயுதங்களுடன் திடீரென்று புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த ராணுவத்தினர் மீது பயங்கரத் தாக்குதல்நடத்தினர்.

இத்தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். காயமடைந்த ஆறு ராணுவத்தினர்படுகாயமடைந்தனர்.

ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில், ஆறு விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே மட்டக்களப்பு அருகே வேளைச்சேனை போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து விடுதலைப் புலிகள்தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஆறு போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் பலத்த காயமடைந்தனர்.

இந்த போலீஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு டெலிபோன் நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கியதில்அங்கு பணிபுரிந்த ஒரு ஊழியர் கொல்லப்பட்டார்.

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று இரவுதான் 42 பேரைக் கொண்ட புதியஅமைச்சரவையை அறிவித்தார். இச்சமயத்தில் இந்த இரட்டைத் தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+