மதுரை பெட்ரோல் பங்க்கில் ரூ.ஒன்றரை லட்சம் கொள்ளை
மதுரை:
மதுரையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் துப்பாக்கி முனையில் ரூ.ஒன்றரை லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்ற 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மதுரை-மேலூர் சாலையில் ஒத்தக்கடை அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒரு பைக்கில் வந்த மூன்று பேர், அந்த பைக்கிற்கு பெட்ரோல் போடுமாறுகூறினர்.
பின்னர் திடீரென்று அவர்களில் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானைநோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார்கள்.
பின்னர் பெட்ரோல் பங்க்கின் கேஷியரிடம் சென்று, துப்பாக்கியையும் கத்தியையும் காட்டி மிரட்டிய அந்த மூன்றுபேரும் அவரிடமிருந்த பணத்தைப் பிடுங்கிக் கொண்டு பைக்கில் ஏறிப் பறந்தனர்.
சுமார் ரூ.ஒன்றரை லட்சம் வரை பணம் பறிபோயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி, சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.மற்றவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிமாகவுள்ள பகுதியில் இந்தத் துணிகரக் கொள்ளை நடந்திருப்பதால், இச்சம்பவம் மதுரைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications