பெங்களூரிலும் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா போலீஸ்படையினரை முடுக்கி விட்டுள்ளார்.

இதுகுறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கர் மற்றும்பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கிலியானா ஆகியோருடன் கிருஷ்ணா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பெங்களூர் விமான நிலையம், ரயில் நிலையம், விதான் செளதா, மெஜஸ்டிக் பஸ் நிலையம் மற்றும் மத்திய-மாநிலஅரசு அலுவலகங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

விதான் செளதா அருகே முக்கிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் முறையான பாஸ்வைத்திருப்பவர்கள் மட்டும் விதான் செளதாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆந்திராவிலும் பாதுகாப்பு தீவிரம்:

ஆந்திர பிரதேசத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா என்றாலே மக்கள் போர்க் குழு என்ற நக்ஸல்கள்தான் ஞாபத்திற்கு வருவார்கள். அவர்களின் தீவிரவாதச்செயல்கள் இங்கு அதிகம் இருப்பதால் எப்போதும் இங்கு பாதுகாப்பும் அதிகமாகவே இருக்கும்.

தற்போது நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை அடுத்து இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திர சட்டசபை, தலைமைச் செயலகம், சார்மினார், ஹைடெக் சிட்டி, அனைத்து ரயில், பஸ்நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதிகளை சுற்றி ரோந்துப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தினுல் நுழையும்பயணிகளை போலீசார் தீவிரமாகப் பரிசோதனை செய்கின்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு குறி வைக்கப்பட்டுள்ள நகரங்களில் ஹைதாராபாத்தும் ஒன்று என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+