கல்லூரி மூடலைக் கண்டித்து மாணவிகள் சாலை மறியல்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக் கல்லூரிகள் திடீரென மூடப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள காயிதேமில்லத் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாநிலத்திலுள்ள அனைத்து அரசு கலை மற்றும் சட்டக் கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகள் மூடப்பட்டன. சென்னையில்உள்ள மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, டாக்டர்அம்பேத்கர் கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, பாரதி கல்லூரி ஆகியவை மூடப்பட்டன.
திடீரென கல்லூரி மூடப்பட்டதைக் கண்டித்து அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரிமாணவிகள், ஸ்பென்சர் பிளாஸா அருகே அண்ணா சாலையின் நடுவில் அமர்ந்து சாலை மறியலில் இறங்கினர்.
இதனால் வாகனப் போக்கு நிறைந்த அண்ணா சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாகவிரைந்து வந்த அண்ணா சாலை போலீசார் மாணவிகளை சமாதானப்படுத்தி கலைந்து போகச்செய்தனர்.
அரசுக் கல்லூரிகளின் விடுதிகளும் மூடப்பட்டு விட்டன. தனியார் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.












Click it and Unblock the Notifications