கொலையான அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு ரூ.50,000 ஜெ. நிதியுதவி
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதி உதவிவழங்கப்படும் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு அதியமான் மீன் பிடிக்க சென்றபோதுதிமுகவினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து திமுகவினரின் வெறிச்செயலுக்கு பல உடன்பிறப்புகள் பலியாகியுள்ளனர்.அதியமான் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதியமான் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, கழகத்தின் சார்பில் ரூ.50,000 குடும்பநலநிதியாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதாகுறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications