மதுரையில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை
மதுரை:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மதுரையில் மாணவர்கள்நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கடந்த 7ம் தேதி சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் மதுரையிலும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மதுரையிலிருந்து தேனி போகும்வழியில் உள்ள நாகமலை புதுகோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதில் வன்முறை வெடித்தது. கல்வீச்சும், சோடா பாட்டில் வீச்சும் நடந்தது.
போலீசார் மீதும் கல் வீச்சு நடந்தது. இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேப்போல் மூலக்கரை என்ற இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 2 பேருந்துகளின் மீதுகல்வீச்சு நடத்தினர். இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. திருப்பாலையிலும் 2 பேருந்துகளின் மீது கல்வீச்சுநடந்தது.
இந் நிலையில் மதுரை நகருக்குள் பல்வேறு கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்திலிருந்து, கலெக்டர்அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் போகும்போது கடைகளின் மீது கல்லெறிந்ததால், கடைகள்மூடப்பட்டன.
பிறகு ஊர்வலம் செல்லும் பாதை குறித்து மாணவர்களுக்கும் போலீசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால்பதட்டம் நீடித்தது. பிறகு போலீசார் சொன்ன பாதையில் மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர்.