லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மீது சந்தேகம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது லக்ஷர்-ஏ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அமைப்புதான் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என இந்திய உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.
காஷ்மீரில் சட்டசபை மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே தான் இந்தத் தாக்குதலும் உள்ளது. அப்போதும்அரசு வாகனத்தில் நிறைய வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு ராணுவ உடையில் தான் ஜெய்ஷ்-ஏ-முகம்மத்தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த இரு அமைப்புகளுமே பாகிஸ்தானில் இருந்து இயங்குபவை. இந்திய நாடாளுமன்றம் தாக்கப்படலாம் எனஉளவுப் பிரிவுகள் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதை பிரதமரும் அத்வானியும் கூட வெளிப்படையாகவே கூறிவந்தனர்.
இந் நிலையில் தாக்குதல் நடந்தவுடன் தீவிரவாதிகளின் தொலைபேசிப் பேச்சுகளை இந்திய உளவுப் பிரிவுகள்ஒட்டுக் கேட்டதில் லக்ஷர்-ஏ-தொய்பாவுக்குத் தான் இதில் தொடர்பிருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
4 பேர் கைது:
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 பேரை டெல்லி போலீசாரும், மத்திய உளவுப் பிரிவினரும் கைதுசெய்துள்ளனர். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
டெல்லியின் தெற்கு, கிழக்கு, வடக்குப் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.இவர்களின் பெயர் விவரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து நாடு முழுவதும் ரகசிய சோதனை நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பகுதிகளில் ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications