திருடிய காரில் வந்த தீவிரவாதிகள்
டெல்லி:
நாடாளுமன்றத்துக்குள் நுழைய திருடப்பட்ட அரசு காரை தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ள்ளனர்.
இரு தினங்களுக்கு முன் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிறுவனம் என்ற அமைப்புக்குச் சொந்தமானஇந்த வெள்ளை நிற அம்பாசிடர் கார் திருடப்பட்டது. இந்தியா ஹேபிடேட் சென்டர் என்ற அரசு கட்டடத்தில்இருந்து இந்தக் கார் திருடு போனது.
திருடப்பட்ட அந்த காரில் டி.எல். 3 சி. ஜே.1527 என்ற அந்தக் காரில் சிவப்பு நிற சுழல் விளக்கையும் சைரனையும்பொறுத்தியுள்ளனர்.
காரின் முன் கண்ணாடி மீது அரசுக் கார்களைப் போல உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர்.
ஆனாலும் இந்தக் காரை ராஜ்யசபாவின் வாயிலில் இருந்த பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.இதையடுத்துத் தான் அவர்களையும் தாண்டி வலுக்கட்டாயமாக காரை ஓட்டிச் சென்ற முயன்றுள்ளனர். அப்போதுவழியில் இருந்த துணை ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.
இதன் பின்னர் தான் காரிலிருந்து இறங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications