நாளை நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தீவிரவாதிகளின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் நாளை நாடாளுமன்றக் கூட்டம் நிச்சயம் நடக்கும் என அரசுஅறிவித்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர்நிருபர்களிடம் பேசிய அத்வானி, நாளை நிச்சயம் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்.
உள்ளே வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என ராணுவம் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது.
தேவைப்பட்டால் நாடாளுமன்ற அவைக்குள்ளும் பாதுகாப்புப் படையினரை நிறுத்துவோம்.
நாடாளுமன்றத்தையே தகர்த்துவிட தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். முடியாவிட்டால் உள்ளே நுழைந்துஎம்.பிக்களைக் கொல்ல நினைத்திருந்தனர்.
ஆனால், அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், 30 நிமிடத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டிவிட்டன நமது படைகள்.












Click it and Unblock the Notifications