அமைச்சர்கள், எம்.பிக்கள் யாரும் காயமடைவில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அனைத்து அமைச்சர்களும் அனைத்து எம்.பிக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் கூறினார்.

தாக்குதலையடுத்து தனது அறைக்குள் புகுந்து பூட்டிக் கொண்ட மகாஜன் செல்போன் மூலமாக வெளியில் இருந்தநிருபர்களிடம் பேசினர். அவர் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய் இன்று அவைக்கே வரவில்லை. உள்துறைஅமைச்சர் அத்வானி வெளியேறிவிட்டார். அமைச்சர்களின் அறைகளில் எம்.பிக்கள் அனைவரும் பாதுகாப்பாகஉள்ளனர்.

தாக்குதல் தொடங்கியவுடன் அமைச்சர்களின் பாதுகாவலர்களும், எம்.பிக்களின் பாதுகாவலர்களும் உடனடியாகசெயல்பட்டு தலைவர்களை அறைகளில் வைத்துப் பூட்டிவிட்டு வாசலில் காவலுக்கு நின்றுள்ளனர். உள்ளே எந்தத்தீவிரவாதியும் நுழையவில்லை என்றார்.

நாடாளுமன்றத்தின் 12ம் எண் கேட் வழியாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கு காவலுக்கு இருந்த 3பாதுகாவலர்களை சுட்டுக் கொன்றனர். மேலும் பலருக்கும் இதில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்தத்தீவிரவாதிகள் எப்படி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+