வாஜ்பாய் இருக்கும் இடம்: விளக்கமளிக்க ராணுவம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோரும்நாடாளுமன்றத்தில் தான் இருந்துள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் வெளியேறிவிட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போதுதீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், அத்வானி நாடாளுமன்றத்தில் தான் உள்ளார் என்பதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வாஜ்பாய் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்மாக எதையும் அறிவிக்க ராணுவமும் பாதுகாப்புப்படையினரும் மறுத்துவிட்டனர். அவரே நிலைமையை நேரில் கண்காணித்து உத்தரவுகள் பிறப்பித்து வருவதாகக்கூறப்படுகிறது.

அதே போல அத்வானி, உள்ளே இருந்தவண்ணம் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். மூத்த அதிகாரிகளுக்குஅவர் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.

இன்னும் சில தீவிரவாதிகள் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் இருக்கலாம் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளஅத்வானி, எம்.பிக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து எம்.பிக்களின் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் பலத்த சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+