பாகிஸ்தான் மீது பெர்னாண்டஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.
பிரதமரின் இல்லம், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த், செளத்பிளாக் கட்டடங்கள், உள்துறை அமைச்சரின் இல்லம், சோனியா காந்தியின் இல்லம் ஆகியவற்றையும்முற்றுகையிட்டு பாதுகாக்க பெர்னாண்டஸ் உத்தவிட்டார். இந்த இடங்களில் பெரும் அளவிலான ராணுவ வீரர்கள்குவிக்கப்பட்டுள்ளனர்.
தனது அறையில் தஞ்சம் புகுந்த நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ், இது பாகிஸ்தானின் வேலையாகத் தான்இருக்க வேண்டும். எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் திறமை நமது படைகளுக்கு உண்டு என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் வாஜ்பாய் பிற்பகலில் தொலைக்காட்சியில் உரையாற்றுவார்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications