தீவிரவாதிகளின் சவாலை ஏற்கிறேன்: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதிகளின் சவாலை ஏற்பதாகவும், அவர்களின் எந்தவிதமான தாக்குதலையும் முறியடித்துக் காட்டுவோம்எனவும் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

இன்று தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றிய வாஜ்பாய், தீவிரவாதிகளை எதிர்த்து மிகக் கடுமையாகபோராடிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார்.

இத் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதிகளைஅவர்கள் பாணியிலேயே சந்திக்க இந்தியா தயார் என்றார்.

இன்று பிற்பகலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தையும் வாஜ்பாய் கூட்டியுள்ளார்.இனி தீவிரவாதிகள் மீது மிக பலத்த தாக்குதல்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

அதே போல பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இருக்குமாறு இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புஅமைச்சர் பெர்னாண்டஸ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீரின் அக்னூர் பகுதியிலும் 12 இடங்களில் வெடிகுண்டுத்தாக்குதல்கள் நடந்துள்ளன. இதையடுத்து அங்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன.

தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த் ராஜ்யசபாவில் இருந்தார். தீவிரவாதிகள்தாக்குதல் தொடங்கியவுடன் அவரை சுற்றி பல வளையங்களாக நின்று கொண்ட இந்திய-திபெத்திய பார்டர்போலீஸ் படையினர் மிகத் தீவிரமான பாதுகாப்பு அளித்தனர்.

இந்தியா ஹேபிடேட் சென்டர் என்ற அரசு நிறுவனத்தின் அம்பாசிடர் காரில் (எண் டி.எல். 3 சி.ஜே. 1527) தான்தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் வந்துள்ளனர். இந்த காரின் மீது சிவப்பு விளக்கு சைரனையும் சுழலவிட்டுக்கொண்டு வந்துள்ளனர்.

தீவிராவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகளும், ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளும்மீட்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+