For Daily Alerts
Just In
சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்தவர் கைது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலி விசாக்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (36) என்பவர் சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமானவகையில் நின்று கொண்டிருந்தார்.
உடனே அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து சோதனை செய்தபோது, அவரிடம் 4 போலி விசாக்கள்மற்றும் போலி ஆவணங்கள் இருப்பது தெரிய வந்தது.
அவற்றை உடனடியாகக் கைப்பற்றிய அதிகாரிகள், பாலசுப்பிரமணியத்தையும் கைது செய்தனர்.
சென்னையிலிருந்து 4 இளைஞர்களை அவர் கொழும்பு வழியாக மலேசியாவுக்கு அனுப்பத் திட்டமிருந்ததாகக்கூறப்படுகிறது.
அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]