For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காரை விற்றவரிடம் போலீசார் தீவிர விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நாடாளுமன்றத்துக்கு நேற்று தீவிரவாதிகள் வந்த காரை விற்றவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

டெல்லியில் உள்ள லக்கி மோட்டார்ஸ் என்ற கார் டீலரிடம்தான் தீவிரவாதிகள் அந்தக் காரை வாங்கியுள்ளனர்.

அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிறுவனம் என்ற அமைப்புக்குச் சொந்தமான இந்த வெள்ளை நிறஅம்பாசடர் காரை அவ்வமைப்பு விற்பதற்கு முடிவு செய்து லக்கி மோட்டார்சை அணுகியுள்ளது.

இதையடுத்துதான் தீவிரவாதிகள் கடந்த 11ம் தேதி லக்கி மோட்டார்சை அணுகி, டி.எல். 3 சி.ஜே. 1527 என்ற பதிவுஎண் கொண்ட அந்தக் காரை வாங்கியுள்ளனர்.

டெல்லியில் தங்களுக்கு வீடு எதுவும் இல்லாத காரணத்தால் காஷ்மீர்-பாரமுல்லா முகவரியைக் கொடுத்து, அதுதொடர்பான ஆவணங்களையும் கொடுத்து தீவிரவாதிகள் அந்தக் காரை வாங்கியுள்ளனர்.

பின்னர் அந்தக் காரில் சிவப்பு நிற சுழல் விளக்கையும் சைரனையும் பொறுத்தியுள்ளனர். காரின் முன் கண்ணாடிமீது அரசுக் கார்களைப் போல உள்துறை அமைச்சகத்தின் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர்.

காரை வாங்கியது தொடர்பாக அவர்கள் அக்கடையில் கொடுத்துள்ள அனைத்து ஆவணங்களும் தற்போதுகைப்பற்றப்பட்டுள்ளன.

கார் டீலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு தீவிரவாதியின் புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்புகைப்படத்தில் உள்ளவனும் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதைப் போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அந்தத் தீவிரவாதிகள் கொடுத்த காஷ்மீர் முகவரிக்கு டெல்லி போலீசார் விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X