சட்டக் கல்லூரி விவகாரம்: நால்வர் குழுவை நியமித்தது ஐகோர்ட்
சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டக் கல்லூரி மாணவர்களால் தேர்வை எழுத முடியுமா என்பதைகண்டறிவதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வக்கீல் விஜயன் உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மனுவை விசாரித்தது.
அப்போது கல்லூரி விடுதியை உடனடியாக திறக்க வேண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வை தள்ளி வைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விஜயன் சார்பில் ஆஜரான வக்கீல்கருப்பன் கூறினார்.
இதைக் கேட்ட அரசு வக்கீல் என்.ஆர்.சந்திரன், 15 மாணவர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர்.அவர்களுக்காக 2500 மாணவர்கள் தேர்வு எழுதுவதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் 15 மாணவர்களும்தனியாக தேர்வு எழுதலாம் என்றார்.
அதைக் கேட்ட தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, உடனடியாக மாணவர்களால் தேர்வு எழுத முடியாது. முதலில்விடுதி திறக்கப்படட்டும். அதன் பிறகு கல்லூரி திறக்கப்படட்டும். இரண்டுமே 24 ம் தேதி திறக்கப்பட வேண்டும்.அதன் பிறகு 26ம் தேதி தேர்வை நடத்தலாம் என்றார்.
பின்னர், சட்டக் கல்லூரி மாணவர்களின் தற்போதைய பிரச்சினைகள், மற்றும் அவர்களது தேர்வு குறித்துக்கண்காணிக்க முன்னாள் டிஜிபி லட்சுமிநாராயணன், சட்டக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் சந்திரசேகர், வக்கீல்கள்வெங்கடாசலம், வைகை ஆகியோர் அடங்கிய நால்வர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு வரும் 20ம் தேதிகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவர்கள் தேர்வு எழுத தகுதியுடன் உள்ளார்களா என்பது குறித்து இந்தக்குழு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார் சுபாஷன் ரெட்டி.