பொடோவை நிறைவேற்ற இதுதான் தருணம்: ஜெ.
சென்னை:
தீவிரவாதிகளுக்கு எதிரான பொடோ சட்டத்தை நிறைவேற்றுவதற்கான சரியான தருணம் வந்து விட்டது என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நம் நாட்டின் முன்னணி அமைப்பான நாடாளுமன்றத்தின் மீதே தீவிரவாதிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் நாடுமுழுவதையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்தக் கொடுமையான செயலை நான் கண்டிக்கிறேன்.
பயங்கரவாதத்தை அழிக்கத் தேவையான பொடோ சட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்குஅனைவரும் உறுதியான ஆதரவளிக்கும் தருணம் வந்துவிட்டது என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதாகூறியுள்ளார்.
பன்னீர் கண்டனம்:
அரசியல் வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுகூடி தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கி. வீரமணி:
பாதுகாப்பு மிகுந்த நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாட்டில்உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து களைய வேண்டியது மத்திய அரசின் கடமை.
தீவிரவாதத்தின் மூல பலத்தைக் கண்டறிந்து அதனை முறியடிக்க அரசு முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகபொதுச் செயலாளர் வீரமணி கூறியுள்ளார்.
ஜி.கே. வாசன்:
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதையே இத்தாக்குதல் சம்பவம்காட்டுகிறது. தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்றுகூறியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.












Click it and Unblock the Notifications