19ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் 12வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி 3வது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவிஏற்றுக்கொண்டார் ரணில்.

இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை கிழக்கு இலங்கையில் ஒரு ராணுவ முகாமையும் போலீஸ்நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3 ராணுவத்தினர், 6 போலீசார், 6 விடுதலைப்புலிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

புதிய பிரதமரான ரணில் தன்னுடைய 42 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களிலேயேஇந்தத் தாக்குதல் நடைபெற்றது.

இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் 17ம் தேதி அவசரமாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையேரணில் தலைமையிலான 42 அமைச்சர்களும் கடந்த புதன்கிழமை அதிபர் சந்திரிகா முன் பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டனர்.

ஆனால் 17ம் தேதி முஸ்லீ"ம்களின் பண்டிகையான ரம்ஜான் என்பதால், அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கையின் 12வது நாடாளுமன்றக் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று இலங்கைஅரசின் செய்தித் தொடர்பாளர் ஆர்ய ரூபசிங்கே தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+