19ம் தேதி கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு:
இலங்கையின் 12வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெறும் தேதி 3வது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை கிழக்கு இலங்கையில் ஒரு ராணுவ முகாமையும் போலீஸ்நிலையத்தையும் விடுதலைப் புலிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3 ராணுவத்தினர், 6 போலீசார், 6 விடுதலைப்புலிகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
புதிய பிரதமரான ரணில் தன்னுடைய 42 பேர் கொண்ட அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களிலேயேஇந்தத் தாக்குதல் நடைபெற்றது.
இதையடுத்து, நாடாளுமன்றம் வரும் 17ம் தேதி அவசரமாகக் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையேரணில் தலைமையிலான 42 அமைச்சர்களும் கடந்த புதன்கிழமை அதிபர் சந்திரிகா முன் பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டனர்.
ஆனால் 17ம் தேதி முஸ்லீ"ம்களின் பண்டிகையான ரம்ஜான் என்பதால், அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கையின் 12வது நாடாளுமன்றக் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெறும் என்று இலங்கைஅரசின் செய்தித் தொடர்பாளர் ஆர்ய ரூபசிங்கே தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications