ரீட்டா விவகாரம்: தேடப்பட்ட விபச்சாரி கைது
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி விற்கப்பட்ட ஆத்தூர் விபச்சார விடுதியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைபோலீஸார் பெரம்பலூரில் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரி, முருகேசன் என்பவரால் கடத்தப்பட்டு ஆத்தூரில் உள்ள விபச்சார விடுதியில்விற்கப்பட்டார். அங்கு போலீரீார் ரெய்டு நடத்தியபோது ரீட்டா மேரியையும் கைது செய்து செஞ்சி கிளைச்சிறையில் அடைத்தனர். அங்கு சிறைக் காவலர்கள் ரீட்டாவை கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதலில் ரீட்டா மேரி விற்கப்பட்ட ஆத்தூர் விபச்சார விடுதியை நடத்தி வந்த ஈஸ்வரி என்ற பெண்தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெரம்பலூநில் உள்ள ஒரு லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரியை போலீசார்கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.