வெளிநாட்டு இந்தியர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

இந்தியாவின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் உள்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில்வாழும் இந்தியர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்க வேண்டும் என்று பெரும்பாலான அமெரிக்க வாழ்இந்தியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலையும் எதிர்த்து அமெரிக்கா போராட வேண்டும் எனவும்அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியன் நேஷனல் ஓவர்சீஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவரான மல்ஹோத்ரா கூறுகையில், இந்தியாவைஅச்சுறுத்த நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைத்து இந்த அருமையானதேசத்தை சேதப்படுத்த இத் தாக்குதல் நடந்துள்ளது.

அவர்களை தயார் செய்யும இடத்திலேயே போய் அடித்துக் கொல்வதன் மூலம் தான் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும். நம்மைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்க நமக்கு முழு உரிமை உண்டு என்றார்.

பா.ஜ.க. வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பின் தலைவர் முகுந்த் மோடி கூறுகையில்,

பாகிஸ்தானின் மதப் பள்ளிகளிலும் முகாம்களிலும் தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போதுதீவிரவாதிகளுக்கு எதிராக உலகம் தழுவிய அளவில் நடந்து வரும் தாக்குதலை நாமும் பயன்படுத்திக் கொண்டுதீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.

இந்தியர்களுக்கான உலக அமைப்பின் தலைவர் தாமஸ் ஆப்ரஹாம் கூறுகையில், தீவிரவாதிகளைத் தேடிப் போய்ஒழிக்க வேண்டும். அவர்கள் வந்து தாக்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றார்.

மேலும் பல்வேறு இந்திய அமைப்புகளும் இத் தாக்குதலைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ள அதே நேரத்தில்தீவிரவாதத்தை தீவரமாகவே ஒடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+