Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குண்டர் சட்டத்தின் கீழ் தாதா வீரமணிக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையின் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அயோத்திக்குப்பம் வீரமணி சென்னையின் பிரபல தாதாவாக இருந்து வருகிறார். கட்டப் பஞ்சாயத்து செய்வது,ஆள் வைத்து அடிப்பது, மாமூல் வசூலிப்பது என சகலவிதமான சட்டவிரோத காரியங்களிலும் இவரும், இவரதுஆட்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திமுகவினர் நடத்திய, கருணாநதி கைது கண்டிப்பு பேரணியின்போதுஏற்பட்ட பெரும் வன்முறைக்கு வீரமணியின் ஆட்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

இத்தனை பெருமை பெற்ற வீரமணி மீது கொலை, கொலைமுயற்சி ஆகியவை தொடர்பாக 30க்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளன. இதுவரை நான்கு முறை அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இருப்பினும்விடுதலையாகி வெளியே வந்த பின்னர் தனது வேலைகளைத் தொடருவது வீரமணியின் வழக்கமாகி விட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்தவரை கடத்திச் சென்று சரமாரியாக வெட்டியவழக்கில் கோர்ட்டில் சரணடைந்தார் வீரமணி. தற்போது சிறைக் காவலில் உள்ளார்.

தற்போது வீரமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை மாநகர ஆணையர் விஜயக்குமார்உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து வீரமணி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரதுகூட்டாளிகள் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+