For Daily Alerts
Just In
வீரப்பன் கூட்டாளி மாதையனின் மனைவி கைது
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மாதையனின் மனைவி மாரியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து ரூ.3.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் முக்கிய கூட்டாளி மாதையன். இவரது மனைவி மாரியம்மாளை கொளத்தூர் போலீசார் மேட்டூர்அருகே கருமலைக்குடல் என்ற பகுதியில் கைது செய்தனர்.
இவரிடமிருந்து ரூ.3.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வீரப்பன்தான் தனக்கு ரூ.5லட்சம் கொடுத்ததாக மாரியம்மாள் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாரியம்மாள் மேட்டூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]