ஆப்கான்-இந்தியா நெருக்கத்தால் பாகிஸ்தான் எரிச்சல்

Subscribe to Oneindia Tamil

கொல்கொத்தா:

ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் எரிச்சல் அடைந்துள்ளது.இதனால் தான் இந்தியா மீது தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது என பிரதமர் வாஜ்பாய் குற்றம்சாட்டினார்.

கொல்கொத்தாவில் பா.ஜ.க., திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்களிடையே பேசிய வாஜ்பாய் கூறுகையில்,

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து இந்தியா வந்து சென்றது நமது அண்டை நாட்டைஎரிச்சல்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மிக நெருக்கமான உறவுவளர்க்கப்படும்.

அவர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளோம். தொடர்ந்து செய்வோம். அதில் மாற்றமே இருக்காது.

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவின் குடும்பமே பாதுகாப்புகாகஇந்தியாவில் தான் தங்கி இருந்தது. சமீபத்தில் இந்தியா வந்த அவர் நமது நாட்டை மிகப் பெரிய மனது கொண்டநாடு என வர்ணித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளின்படி லக்ஷர்-ஏ-தொய்பா மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம்கோரியுள்ளோம் என்றார்.

பின்னர் ரவீந்திர நாத் தாகூர் நிறுவிய சாந்தி நிகேதனில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய வாஜ்பாய், இந்தியாமீது நடந்த தாக்குதலும் அமெரிக்கா மீதான தாக்குதலும் ஒரே மாதிரியானது தான். எல்லா வகைகளிலும்தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டியாக வேண்டும்.

நமது அண்டை நாட்டில் மதத்தை போதிக்க வேண்டிய மதரஸா பள்ளிகளில் கூட பிரிவினைவாதமும் தீவிரவாதமும்தான் போதிக்கப்படுகிறது. அவை தீவிரவாதத்தின் தொழிற்சாலையாக மாறி வருகின்றன. இது போன்ற ஒருநாட்டிடம் போய் அமைதியையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் போதிக்க முடியாது. அவர்களை வேறுவகையில்தான் கையாள வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+