விரைவில் பா.ஜ.க.-அதிமுக கூட்டணி நிச்சயம்
சென்னை:
அதிமுக-பா.ஜ.க. இடையே விரைவில் கூட்டணி வரும் என்பது உறுதியாகிவிட்டது.
நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்துவிட்டு வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் கிருபாநிதி முதலில் இதுஅரசியல்ரீதியான சந்திப்பு இல்லை என மறுத்தார்.
பின்னர் அவரை மீண்டும் மீண்டும் நிருபர்கள் கேள்விகேட்டபோது அவர் கூறியதாவது:
ஜெயலலிதா நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர். ஜெயலலிதாவின் கண்கள் திறந்துவிட்டன. இப்போது அவர்பா.ஜ.கவின் செயல்பாட்டை புரிந்து கொண்டுவிட்டார். அரசியலில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
மத்திய அரசை அவர் இப்போதெல்லாம் குறை கூறுவதில்லை, இதிலிருந்து எங்களை அவர் புரிந்துகொண்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.
உடனடியாக தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் வருமா என்று தெரியாது. ஆனால், எதுவும் நடக்கலாம் என்றார்.
கூட்டணியில் இருந்து திமுகவை கழற்றிவிட தருணம் பார்த்துக் கொண்டுள்ளது பா.ஜ.க.












Click it and Unblock the Notifications