லக்ஷர்-ஏ-தொய்பாவின் பெயர் மாற்றம்
டெல்லி:
அமெரிக்கா, இந்தியாவின் நெருக்குதலுக்கு உள்ளாகியுள்ள லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் இரண்டுமேபிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ள பெயர்களை மாற்றிக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து முத்தாகிதா ஜிகாத் கவுன்சில் என்றஅமைப்பை பாகிஸ்தானில் நடத்தி வருகின்றன. இதில் தான் இப் பெயர் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்கவும், தலைவர்களைக் கைது செய்யவும், வங்கிக் கணக்குகளைமுடக்கவும் இந்தியா கோரி வருகிறது. அமெரிக்காவும் இந்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட இயக்கங்களின்பட்டியலில் சேர்த்துவிட்டது. இந்த அமைப்பினருக்கு அமெரிக்க விசா கிடைக்காது.
இப்போது, பெயரை மாற்றிக் கொண்டு வேறு பெயரில் வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டால் தப்பிவிடலாம்என இந்த அமைப்புகள் கருதுகின்றன.
ஏற்கனவே, பல அமைப்புகள் இது போல பெயர்களை மாற்றிக் கொண்டு தடைகளை மீறி வேறு பெயரில்தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அமைப்புகளும் பெயரை மாற்றிக் கொண்டுவிட்டதாகபாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பின் தலைவாராக இருப்பவன் மெளலான மசூத் அஸார். காஷ்மீர் சிறையில் இருந்தஇவனை விடுவிப்பதற்காகக் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திக் கொண்டுஆப்கானிஸ்தான் சென்றனர்.
அமெரிக்க நெருக்குதலுக்குப் பிறகும் பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட்டுவருகின்றன.
லக்ஷர்-ஏ-தொய்பா அமைப்பின் தஸைவன் ஹபிஸ் முகம்மத் பாகிஸ்தான் பத்திரிக்கைக்கு கொடுத்துள்ளபேட்டியில், நாடாளுமன்றத்தைத் தாக்கியது போல இந்தியா மீது மேலும் 6 கடும் தாக்குதல்கள் நடத்தப்படும்என்றான்.