இடைத் தேர்தலில் ஜெயாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: காங்கிரஸ்
சென்னை:
ஜனநாயகத்துக்கு விரோதமாக தமிழக அரசு விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாககைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸின் தமிழக மாநில தலைவர் கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நிருபர்களுக்குபேட்டியளிக்கையில் கூறியதாவது,
தமிழக அரசு ஜனநாயகத்துக்கு எதிராக விலைவாசியை உயர்த்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டில் ரூ.900 கோடிபற்றாக்குறை என்று கூறிவிட்டு ரூ.5,000 கோடிக்கு விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வை தமிழகஅரசு உடனடியாக கை விடவேண்டும்.
முல்லை பெரியாறு அணைத்திட்டம் சம்பந்தமாக தமிழக அரசு, கேரளாவுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரசுடன், வாழப்பாடி தலைமையிலான ராஜீவ் காங்கிரஸ் அடுத்த மாதம் காங்கிரஸ் தலைவி சோனியாதலைமையில் இணைக்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்களின் வயிற்றில் அடித்துள்ள அதிமுகவுக்கு மக்களே இடைத் தேர்தலில் பாடம்புகட்டுவர் என்றார்.