For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுகவின் ரம்ஜான் விருந்து .. ஜெ. வரவில்லை
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்பாடு செய்திருந்த ரம்ஜான் நோன்பு திறப்பு இப்தார் விருந்து நிகழ்ச்சியில் அவரே கலந்துகொள்ளவில்லை.
ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் திடீரெனஹைதராபாத் சென்று விட்டார்.
அவர் அங்கிருந்து சென்னை திரும்ப தாமதமானதையடுத்து அதிமுக அவைத் தலைவர் புலமைப்பித்தன் தலைமையில் வெள்ளிக்கிழமைமாலை 5.30 மணிக்கு இப்தார் விருந்து உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடந்தது.
விருந்தில் முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய முக்கிய முஸ்லீம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர் நலத்துறைஅமைச்சர் அன்வர்ராஜா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாம், சுகாதாரத்துறை செயலாளர் முனீர் ஹோதா உள்ளிட்ட அதிகாரிகளும்கலந்துகொண்டனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]