இந்தியாவே நடத்திக் கொண்ட தாக்குதல் இது: பாகிஸ்தான் உளறல்
டெல்லி:
காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்புவதற்காக நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலை இந்தியாவே தான்திட்டமிட்டு நடத்தியது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந் நிலையில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அஜிஸ் அகமத் கான் நிருபர்களிடம்கூறுகையில், தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா தான் நடத்தியதாக இந்தியா கூறுகிறது. இதைநிரூபிக்க இந்தியா ஆதாரங்களைத் தந்தால் விசாராண நடத்துவோம் என்றார்.
ஆனால், இந்தப் பேட்டி முடிந்த சில மணி நேரத்தில் பேசிய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷீத் குரேஷி,
இந்த நாடகத்தை (தாக்குதலை) இந்தியா தான் திட்டமிட்டு நடத்தியுள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும்இல்லை. சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட இந்தியா உலக நாடுகளின் மத்தியில் பெயர்வாங்குவதற்காக இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் மீது தாக்குதல் நடந்த பிறகு இந்தியாவிடம் இருந்து இது போன்ற நாடகத்தை நாங்கள்எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தோம்.
ஜம்மூ-காஷ்மீர் சட்டசபை மீதான தாக்குதலையும் இந்தியாவே தான் நடத்தியது என்றார்.












Click it and Unblock the Notifications