தீவிரவாத அமைப்புத் தலைவர்களை கைது செய்ய பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை
டெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின்தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு லக்ஷர்-ஏ-தொய்பா கும்பல் தான் காரணம் என இந்திய உளவுப்பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ உறுதி செய்துள்ளது. தாக்குதல் நடந்தவுடன் இந்தத் தீவிரவாதிகளின் ரகசியவயர்லெஸ் பேச்சை இன்டெலிஜென்ஸ் பீரோ ஒட்டுக் கேட்டபோது இது உறுதியானது.
இதையடுத்து நேற்று பாகிஸ்தான் தூதரக அதிகாரியை தனது அலுவலகத்து வருமாறு இந்திய வெளியுறவுத்துறைச்செயலாளர் சோகிலா ஐயர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது அலுவலம் வந்தத பாகிஸ்தான் தூதரகஅதிகாரியிடம் சில ஆவணங்களை காட்டிய சோகிலா, தாக்குதலுக்கு லக்ஷர்-ஏ-தொய்பா தான் காரணம் என்பதைசுட்டிக் காட்டினார்.
இத் தாக்குதக்குக் காரணமாக லக்ஷர் அமைப்பின் மீதும், அவர்களுக்கு நெருக்கமான ஜெய்ஷ்-ஏ-முகம்மத்அமைப்பின் மீதும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்யவேண்டும். அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.