பெரும் விபத்து தவிர்ப்பு: பெங்களூர்-சென்னை ரயில் தப்பிய

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் பெரும் விபத்தில் சிக்க இருந்த சென்னை மெயில் ரயிலின் பயணிகள் ஒரு காவலாளியின்சமயோஜிதமான செயலால் உயிர் தப்பினர்.

நேற்று இரவு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் சாலை அருகே உள்ள ரயில் பாலத்தின் கீழ் ஒரு எண்ணெய் லாரியும்இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த லாரியும் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன. இரு லாரிகளும் மோதிக்கொண்டு ரயில் பாலத்தின் தூண் மீதும் மோதின.

இதில் அந்தத் தூண் நகர்ந்து ரயில் தண்டவாளமும் வளைந்து ஒரு அடிக்கு மேல் இடம் மாறிவிட்டது.

அப்போது அந்த இடத்தை நோக்கி சென்னை மெயில் வந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்த அருகாமை கட்டடத்தில் இருந்த வெங்கட்ராமன் என்ற கட்டடக் காவலாளி தண்டவாளத்தில் ஏறிஉயிரையும் பொருட்படுத்தாமல் ரயில் வந்த திசையில் ஓடினார். தனது குல்லாவையும் மப்ளரையும் அசைத்துரயிலை நிறுத்துமாறு டிரைவருக்கு சைகை காட்டினார்.

இதைக் கவனித்த ரயிலின் டிரைவர் அதை மெதுவாக நிறுத்தினார். தண்டவளாம் இடம் மாறிப்போய் இடத்துக்குமிக அருகில் வந்து அந்த ரயில் நின்றது.

ரயில் நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் பாலத்தில் இருந்து ரயில் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனபோலீசார் தெரிவித்தனர்.

லாரியின் டிரைவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என ரயில்வேதுறை கேட்டுக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+