தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி:
கோவை வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா தீவிரவாதி பாஷாவை விடுவிக்காவிட்டால்தூத்துக்குடி ரயில் பாதையை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மர்மக் கடிதம் வந்ததையடுத்து அங்குகண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு வந்த இக் கடிதத்தில், 35 நாட்களுக்குள் பாஷாவை விடுவிக்கவேண்டும். இல்லாவிட்டால் குண்டுகளை வைத்து ரயில் பாதையைத் தகர்ப்போம், இப்படிக்கு அல்-உம்மா எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தூக்துக்குடி ரயில் நிலையத்திலும், ரயில் பாதையிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை செல்லும் முத்து நகர் எக்ஸ்பிரஸ்ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் உடமைகள் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையிடப்படுகின்றன.
இரவு நேரங்களில் ரயில் பாதை கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.