மக்களுக்கு வாஜ்பாய் பதில் சொல்லியாக வேண்டும்: வி.பி.சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கப் போவதாக முன் கூட்டியே உளவுப் பிரிவினர் எச்சரித்திருந்தும் அதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் வாஜ்பாய் தவறிவிட்டார் என முன்னாள் பிரதமர் வி.பி.சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்த சிங் விமான நிலையத்தில் நிருபர்களிடம்பேசகையில், இந்த விஷயத்தில் மக்களுக்கு வாஜ்பாய் பதில் சொல்லியாக வேண்டும்.

தாக்குதல் நடக்கலாம் என மத்திய உளவுப் பிரிவுகள் மட்டுமின்றி, மும்பை போலீஸ் கமிஷ்னரும் மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு தகவல் கொடுத்திருந்தனர். வழக்கமாக இந்தத் தகவல்கள் எல்லாம் பிரதமருக்குப் போய் சேரும்.

பொடோ போன்ற ஒரு சட்டத்தை வைத்திருந்தும் கூட தீவிரவாதிகளின் தாக்குதலைத் தடுக்க அரசு தவறிவிட்டது.நமது உளவுப் பிரிவுகளும் பாதுகாப்புப் படையினரும் சிறப்பாக செயல்பட்டும் அரசுத் தரப்பில் தான் தவறுநடந்துள்ளது என்றார் வி.பி.சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+