சென்னையில் குழாய்களில் தண்ணீர் !!!!!
சென்னை:
சென்னையில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.
கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சென்னையில் லாரிகளில் தான் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குழாய்களில் தண்ணீர் வருவதுநின்று 8 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
இப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கியிருப்பதால் குழாய்கள் மூலம் நகரில் குடிநீர் வினியோகம்செய்ய மெட்ரோ வாட்டர் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக வட சென்னையில் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைமுதல் குடிநீர் வினியோகம் குழாய்கள் மூலம் துவங்கியது.
இருப்பினும் பல பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் கூறினர். குழாய்களில் தண்ணீர் வந்த சில பகுதிகளிலும்கூட கொஞ்ச நேரம்தான் தண்ணீர் வந்தது.
குழாய்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த காரணத்தால் உள்ளே அடைபட்டிருக்கும். அவை சரியாக சில நாட்கள் ஆகலாம்.அதன் பிறகு தடையின்றி தண்ணீர் சப்ளைஇருக்கும் என்று மெட்ரோ வாட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.