ஆப்பிள் லாரியில் ஆயுதங்கள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ஆப்பிள் லாரியில் கொண்டுவரப்பட்ட ஏராளமான ஆயுதங்களையும்,கம்ப்யூட்டரையும், 10 லட்சம் ரூபாயையும் ஸ்ரீநகர்போலீசார் நேற்றிரவு கைப்பற்றினர்.

டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஆப்பிள் வியாபாரி செளக்கத் ஹூசைன் என்பவரின் வீட்டில்தான் அடிக்கடி கூடிதீவிரவாதிகள் ஆலோசனை நடத்தினார்கள் என்று கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்அப்துல் ரஹ்மான் ஜீலானி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் செளக்கத்தின் வீட்டை முற்றுகையிட்ட டெல்லி போலீசார், அங்கிருந்த அவருடைய மனைவிஆப்சான் குரு என்ற நவ்ஜோத் சந்துவைக் கைது செய்தனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் பற்றி தனக்குத் தெரியும் என்று டெல்லி போலீசாரிடம் அனைத்தையும் ஒப்புக்கொண்டஆப்சான், தன் கணவர் செளக்கத்தும் மற்றொரு ஆப்பிள் வியாபாரி முகமது அப்சாலும் ஆப்பிள் ஏற்றிய லாரியில்காஷ்மீர் சென்றிருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து காஷ்மீருக்குத் தகவல் பறந்தது. உடனடியாகச் செயல்பட்ட ஸ்ரீநகர் போலீசார், செளகத்தையும்அப்சாலையும் வளைத்துப் பிடித்தனர்.

அவர்களுடைய லாரியில் ஆப்பிள்களுடன் கொண்டு செல்லப்பட்ட ஏராளமான ஆயுதங்கள், ஒரு லேப்-டாப்கம்ப்யூட்டர் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

செளகத்தின் மனைவி ஆப்சான் கடந்த சில நாட்களாகவே நாடாளுமன்றத்திற்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அங்கு உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவர்தான்தீவிரவாதிகளுக்கு வரைபடம் போட்டுத் தகவல் கொடுத்துள்ளார்.

இவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து, தாக்குதல்நடத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+