பின் லேடனின் ரேடியோ தொடர்பு கண்டுபிடிப்பு
தோரா போரா:
தோரா போரா மலையில் பதுங்கியிருக்கும் பின்லேடன், ரேடியோ மூலம் அல்-கொய்தாவிற்கு இட்ட கட்டளையைகேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒயிட்மலைப்பகுதியில் அமெரிக்கப் படைகள் கடுமையாக தாக்கின. பிறகு ஒரு மணி நேரம் கழித்து பி-52 வகை போர்விமானங்களும் கடுமையாக அந்த பகுதியைத் தாக்கின.
இந்நிலையில் அல்-கொய்தா படையினருக்கு ரேடியோ மூலம் பின்லேடன் அளித்த கட்டளைகளை அமெரிக்காஇடைமறித்துக் கேட்டுள்ளது.
அந்த பேச்சிலிருந்து, அமெரிக்க தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் அடிக்கடி மறைவிடத்தை மாற்றிவருவதால் பின்லேடனுடன் உள்ளவர்கள் மிகவும் சோர்ந்து விட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதே மாதிரி கடந்த சில தினங்களில் நிறைய முறை பின்லேடன் ரேடியோவில் பேசுவதை கேட்டுள்ளனர். இதனால்பின்லேடன் நிச்சயம் இங்குதான் ஒளிந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவினர் இன்னும் நம்புகின்றனர்.