For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விசாரணைக்கு உதவ பாகிஸ்தான் தயாராம்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக டெல்லி போலீசார் மேற்கொண்டுள்ள விசாரணைக்கு உதவ நாங்கள்தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ரஷித் குரேசிகூறினார்.

நேற்று (சனிக்கிழமை) அவர் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அமைப்பு ஏதாவது ஈடுபட்டிருந்தால், அதன் மீதுநடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.

பாகிஸ்தான் அமைப்புக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதை இந்தியா நிரூபித்தால், அவ்வமைப்பின் மீதுநடவடிக்கை எடுப்பதற்கு பாகிஸ்தான் அரசு எந்தவிதத்திலும் தயங்காது.

இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமாக ஒரு பாகிஸ்தான் அமைப்புதான் காரணம் என்று ஆதாரத்துடன்நிரூபிக்கப்பட்டால், எங்கள் நாடு அதை மன்னிக்காது என்றார் அவர்.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்என்று டெல்லி போலீசார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X