For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்டவாளத்தில் மர்ம பார்சல் - சென்னையில் பீதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில்வே நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் கிடந்த மர்மபார்சலால் சென்னையில் பெரும் பீதி நிலவியது.

சென்னை வண்டலூர் மற்ரும் ஊரப்பாக்கம் ரயில்வே நிலையங்களுக்கிடையே கேங் மேன்கள் நேற்றுசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தண்டவாளத்தில் மர்மமான முறையில் ஒரு பார்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பார்சலின்வெளியில் இரண்டு ஒயர்கள் நீண்டு கொண்டிருந்தன.

இதனால் பீதியடைந்த கேங்மேன்கள் செங்கல்பட்டு ரயில்வே நிலையத்துக்கும், அருகில் உள்ள போலீஸ்ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அந்த பார்சலை சோதித்த போது இரண்டு பேட்டரிகள், ஒயர்கள் மட்டுமே இருந்துள்ளது. இந்த பார்சல் கிளப்பியபீதியால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாக சென்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X