ரீட்டா வழக்கு: கைதி வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்கு தொடர்பாக செஞ்சி சிறையில் அவளது பக்கத்து அறையில் இருந்த கைதிதிண்டிவனம் கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
செஞ்சி சிறை காவலில் வைக்கப்பட்டிருந்த ரீட்டா, சிறை வார்டர்களால் கற்பழிக்கப்பட்டதாக சிறை வார்டர்கள்,சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் டாக்டர் உட்பட போலீசார் சஸ்பென்டுசெய்யப்பட்டனர்.
செஞ்சி சிறையில் கற்பழிக்கப்பட்டபோது, பக்கத்து அறையில் இருந்த கைதி ஏகாம்பரத்தை முக்கிய சாட்டியாகபோலீசார் விசாரித்தனர். ஏகாம்பரத்தை திண்டிவனம் ஜூடிசியல் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்அரிகிருஷ்ணன் ஆஜர் செய்தார்.
நீதிபதி நசிர் அகமது முன்பு ஏகாம்பரம் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் ரீட்டாவைகற்பழித்தவர்களின் பெயர்களையும், நடந்த சம்பவங்களையும் விரிவாக கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications