தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் சாவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத் தாக்குதலின்போது, குண்டுக் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இறந்தார்.
அப்போது நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் ஆறு பாதுகாப்புப் படை வீரர்களும் ஒரு நாடாளுமன்றத்தோட்டக்காரரும் கொல்லப்பட்டனர்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவன காமிராமேன் உள்பட சுமார் 25 பேர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்குண்டுக் காயங்களுடன் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் நாடாளுமன்றத்தின் 11ம் எண் கேட்டில் பாதுகாப்புப் படை வீரராக இருந்த மத்வார் சிங்கும் ஒருவர்.வயிற்றில் குண்டுக் காயமடைந்த இவர் உயிருக்குப் போராடி வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். இவரது மறைவுக்கு மக்களவைசபாநாயகர் பாலயோகி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications