இன்னும் சில நாள் பொறுத்திருப்போம்: அத்வானி
டெல்லி:
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்த இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் இருந்து வருவது அனைவருக்கும்தெரிந்து விஷயம்தான்.
நம் நாடாளுமன்றத்தைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஏற்கனவே பாகிஸ்தானிடம் கோரப்பட்டுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-ஏ-முகமது ஆகிய இரு அமைப்புகளும் சேர்ந்துதான் இத்தாக்குதலைநடத்தியுள்ளன என்பதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தானிடமிருந்து ஏதாவது பதில் வருகிறதா என்று இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் எதிர்பார்ப்போம். இந்தக்காத்திருப்புக்குப் பலன் கிடைக்காவிட்டால், நிச்சயம் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்என்றார் அத்வானி.