மேலும் 3 பேர் கைது
டெல்லி:
நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து மேலும் இரண்டு பேரை டெல்லி போலீசாரும் ஒருவரைஸ்ரீநகர் போலீசாரும் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் முகர்ஜி நகர், காந்தி விஹாரில் உள்ள வீட்டின் உரிமையாளர் சுபாஷ்மல்ஹோத்ரா மற்றும் வீட்டு புரோக்கர் வீரேந்திர பால் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் தங்கியிருந்த தீவிரவாதிகளைப்பற்றி வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தவறியதால்,இவர்கள் இருவரையும் பிரிவு 188ன் கீழ் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சட்டப்படி வீட்டில் தங்கியிருப்பவர்களைப்பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்தத்தீவிரவாதிகள் வந்து ஒரு மாதம் ஆனபிறகும் கூட இதுகுறித்து மல்ஹோத்ரா தெரிவிக்கவில்லை என்றும் போலீசார்கூறினர்.
ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆப்பிள் வியாபாரியான முகமது அப்சால்ஒரு மாணவன் என்றுதான் புரோக்கர் பால் வீட்டு உரிமையாளரிடம் கூறியிருக்கிறான்.
மல்ஹோத்ராவின் வீட்டை இன்று காலை சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து 35 கிலோ வெடிமருந்துகளையும்கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரைத் தவிர, நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக ஒருவரை ஸ்ரீநகர் போலீசார் கைதுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications