ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவு இந்தியா சப்ளை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன்கள் உணவுப் பொருட்களை இந்தியா சப்ளைசெய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அடுத்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு 15,000 டன் உணவுப்பொருட்களை இந்தியா சப்ளை செய்யும்.
ஆப்கானிஸ்தானுக்கு உணவைக் கொண்டு செல்லவேண்டும் என்றால் ரயில்களின் மூலம் பாகிஸ்தான்வழியாகத்தான் செல்ல வேண்டும். அதற்கு நிறைய செலவாகும்.
டபிள்யூ.எப்.பி.க்கு அனைத்து நாடுகளிலும் கிளைகள் உண்டு. பாகிஸ்தானில் உள்ள அதன் கிளை அலுவலகத்தின்மூலம் இது பற்றி பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆட்சேபிக்கும் பட்சத்தில் கப்பல் வழியாக உணவுகளை எடுத்து செல்லவும் முயன்று வருகிறது.












Click it and Unblock the Notifications